search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக ஆர்வலர்கள்"

    • ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • நடுவில் கண்காணிப்பு கோபுரம் சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்களில் ஒவ்வொரு வளாகத்திற்கும் 31 அறைகள் கொண்ட இந்த சிறைச்சாலை அழகிய தோற்றத்துடன் காணப்பட்டு வந்தது.

    தஞ்சாவூர் :

    இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சுதந்திரத்திற்கான வேட்கை அதிகரித்து போராட்டங்கள் தொடங்கிய நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்களை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் சிறைகளை அமைத்த ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் 1885 ஆம் ஆண்டு சிறைச்சாலையை அமைத்தனர்.

    இங்கு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை அடைத்து வைத்து சித்திரவதை நடத்தியதாக வரலாறு உண்டு.

    ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறைச்சாலை பின்பு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியாக மாற்றப்பட்டு குற்றச்செ–யல்களில் ஈடுபடும் சிறார்கள் வைத்திருக்கும் இடமாக மாற்றப்பட்டது .

    மேலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்குமிடமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கேயே 8-ம் வகுப்பு வரை ராஜாஜி நடுநிலைப்பள்ளி என்ற பள்ளி் தற்பொழுது இயங்கி வருகிறது.

    நடுவில் கண்காணிப்பு கோபுரம் சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்களில் ஒவ்வொரு வளாகத்திற்கும் 31 அறைகள் கொண்ட இந்த சிறைச்சாலை அழகிய தோற்றத்துடன் காணப்பட்டு வந்தது.

    கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக 12 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது.

    இதனால் தென்புறம் உள்ள சிறைப்பகுதிகளில் பாதி சிறைப்பகுதிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல அறைகளும் உடைக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.

    தற்போது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்றும் வகையில் அவர்களின் நினைவு கூறும் வகையில் இந்த சிறைச்சாலையை புனரமைத்து 140 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இந்த சிறைச்சாலையை பாதுகாக்க வேண்டும். நினைவு சின்னமாக ஆக்க வேண்டும்.

    வளாகத்தில் உள்ள சுதந்திரதேவி சிலை கூட சிதிலமடைந்து உள்ளது . அதனையும் சீரமைக்க வேண்டும் என்று தஞ்சை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலைகள் பல இடங்களில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
    • இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்காமல் அங்கும் இங்குமாக செல்கிறார்கள்

    நாகர்கோவில்,

    நாகர்கோவில் நகரில் கோட்டாறு, செட்டிகுளம், வேப்பமூடு, மணிமேடை, வடசேரி பகுதிகளில் தினமும் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    இதனை சமாளிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சாலைகள் பல இடங்களில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

    ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவழிப்பாதை வழியாக செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.குறிப்பாக செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலை ஒரு வழி பாதையாக உள்ளது.

    ஆனால் இந்த சாலையில் தினமும் காலை-மாலை நேரங்களில் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்காமல் அங்கும் இங்குமாக செல்கிறார்கள். போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் நின்றாலும் அதையும் மீறி செல்வதால் விபத்துகள் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக காலை- மாலை நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெற்று வருகிறது.இதைத்தடுக்கும் வகையில் போக்கு வரத்து போலீசார் நட வடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    இதேபோல் சவேரியார் ஆலயத்திலிருந்து செட்டிகுளம் செல்லும் சாலையும் ஒரு வழி பாதை ஆகும். அந்தப் பகுதியிலும் தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் ஓருவழி பாதையில் சென்று வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    வேப்பமூட்டில் இருந்து மணிமேடை செல்லும் சாலையும் ஒரு வழி பாதையாக செயல்படுத்த ப்பட்டு வருகிறது. ஆனால் அந்த சாலையிலும் வாகன ஓட்டிகள் அத்துமீறி நுழைந்து வருகிறார்கள்.

    எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளை கடைப் பிடிப்பதுடன் ஒருவழிப் பாதையில் செல்வோர் மீது போலீசார் கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கையாக உள்ளது.

    • நாகை சாலையில் நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் பல அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
    • சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்-நாகை சாலையில் முக்கிய அலுவலக ங்களான நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சார்நிலை கருவூலம், பள்ளிக்க–ல்வித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த சாலையில் தினசரி பகல் நேரங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியா் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம் –நாகை மெயின்ரோட்டிலிருந்து நீதிமன்றம் சாலை பிரியும் இடத்திற்கு இரு புறங்களிலும் வேகத்தடை அமைத்து தந்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை உடன் செய்து விபத்தினை தடுக்க உரிய துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ×